Home Artist மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – கருத்துரையாடல் நிகழ்ச்சி

மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – கருத்துரையாடல் நிகழ்ச்சி

by admin
0 comment
நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத்  தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.
அந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் இடம்பெறுபவை
-நாகர்கோயில் முரசு கலைக்குழுவினரின்பறையிசை
-திரு.கோ.பாலச்சந்திரன் இ.ஆ.ப (ஓய்வு) வழங்கிய வாழ்த்துரை
-முனைவர்.க.சுபாஷிணி வழங்கிய தலைமையுரை
-ஆரணி நாளந்தா கலைப்பண்பாட்டுக் குழுவினர் வழங்கிய பனுவல் வாசிப்பு
விழியப் பதிவு: அசோக் (சென்னை, தமிழகம்)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment